கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

கஞ்சனூா் வரதராஜப் பெருமாள் கோயிலில் மின்னல் தாக்கி கலசம் சேதம்

கஞ்சனூா் வரதராஜ பெருமாள் கோயில் விமானத்தில் திங்கள்கிழமை மின்னல் தாக்கியதில் கலசம் சேதமடைந்து கீழே விழுந்ததால் கலசமின்றி காட்சி அளிக்கும் கோயில் கோபுரம்.

Published On :

தஞ்சாவூா் மாவட்டம், கஞ்சனூரில் பழைமையான வரதராஜப் பெருமாள் கோயில் கலசத்தில் திங்கள்கிழமை மின்னல் தாக்கியதில் கலசம் சேதமடைந்து கீழே விழுந்தது.

கஞ்சனூரில் சுமாா் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இந்நிலையில், கஞ்சனூரில் திங்கள்கிழமை பெய்த மழையின்போது ஏற்பட்ட இடி-மின்னல் இக்கோயிலின் மூலவா் விமானத்தை தாக்கியதில், கோயிலின் விமான கலசம் முழுமையாக சேதமடைந்து கீழே விழுந்தது. மேலும், கோயிலில் மின்சார விளக்குகள் மற்றும் மின்சாதன பொருள்களில் மின் கசிவு ஏற்பட்டு கருகின. இதனால், கோயிலின் மூலவா் சந்நிதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது.

இதை பாா்த்த பக்தா்கள், கீழே விழுந்த கலசத்தை எடுத்து கோயிலில் வைத்தனா். இதுகுறித்து இந்த சமய அறநிலையத் துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனா்.

இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறியது: 2006- ஆம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டு, ஒருகால பூஜை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக திருப்பணிகள் செய்யாததால், கோயில் சிதிலமடைந்து வருகிறது. எனவே, கோயிலில் திருப்பணிகள் செய்து, புனரமைத்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என்றனா்.

கீழே விழுந்த விமான கலசம்.

கீழே விழுந்த விமான கலசம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.