திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு: காதர் மொய்தீன்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவளிக்கும்  என்றார் அக்கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன்.

Updated On :9 ஏப்ரல் 2018, 2:38 am

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவளிக்கும்  என்றார் அக்கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன்.
திருச்சியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற கட்சியின் இளைஞரணி கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்வில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் ஏப்ரல் 12 ஆம் தேதி கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெறஉள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் குறித்து போராட்டம்  நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியிலும், அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையிலான 22 கட்சிகள் கொண்ட கூட்டணியிலும்  அங்கம் வகிக்கிறோம். கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு  ஆதரவு அளிப்பது முடிவு செய்துள்ளோம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை திமுகவுடன் தொடர்ந்து போராடுவோம் என்றார்.
முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானங்கள் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில அளவிலானஇளைஞரணி மாநாட்டை   கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் ஜூலை மாதம் நடத்துவது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை திமுக நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பது, திருச்சியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நடைபெற்றன. கூட்டத்துக்கு  இளைஞரணியின் தேசியப் பொதுச் செயலர் சுபைர் தலைமை வகித்தார்.  மாநிலப் பொதுச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஏ.எம். முகம்மது  அபுபக்கர்,   முதன்மைத் துணைத் தலைவரும், முன்னாள் மக்களவை  உறுப்பினருமான எம்.அப்துல் ரகுமான்,  திருச்சி தெற்கு மாவட்டத் தலைவர் எம்.ஏ. முகமது நிஜாம், செயலர் கே.எம்.கே.  ஹபீபுர் ரகுமான் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் இளைஞரணியின் புதிய மாநிலத் தலைவராக முகமது யூனுஸ், பொதுச் செயலராக அன்சாரி மதார், பொருளாளராக அபு பாரீஸ், துணைத் தலைவர்களாக முகமது அபிபுல்லா, செய்யது பட்டாணி, முஸ்தாக் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.