நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பெண்ணுக்கு கத்திக் குத்து: கட்டட தொழிலாளி கைது

திருச்சியில் கள்ளக்காதல் சம்பவத்தில் பெண்ணை கத்தியால் குத்தியவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

Updated On :23 ஜூலை 2018, 8:47 am IST

திருச்சியில் கள்ளக்காதல் சம்பவத்தில் பெண்ணை கத்தியால் குத்தியவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
திருச்சி  உறையூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர் (52) கட்டடத் தொழிலாளி. இவருக்கும்  அதே பகுதி சின்னச்செட்டித் தெருவைச் சேர்ந்த உஷாராணி என்ற விதவைப் பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.  இந்நிலையில் அவரது நடத்தையில் பாஸ்கருக்கு சந்தேகம் ஏற்பட்டதாம். சனிக்கிழமை காலை கடைவீதியில் உஷாராணி வேறொரு நபருடன் பேசிக்கொண்டு நின்றுள்ளார்.  இதையடுத்து அன்றிரவு உஷாராணியின் வீட்டுக்குச் சென்ற பாஸ்கர், உஷாராணியிடம் அவர் பேசிக்கொண்டிருந்த நபர் குறித்து விசாரித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பாஸ்கர் கத்தியை எடுத்து உஷாராணியின் உடலில் கீறியதுடன் கையில் குத்தியுள்ளார். இதனையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த உஷாராணி கொடுத்த புகாரின் பேரில், உறையூர் போலீஸார் வழக்குப் பதிந்து பாஸ்கரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.