இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திருச்சி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலர் ஆய்வு

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2020, 3:57 am

DIN

திருச்சி: திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் கரோனா சிகிச்சை தொடங்கப்பட்ட மாவட்டங்களில் திருச்சியும் முதன்முதலில் இடம்பெற்றது. திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சிகிச்சை பெறும் வகையில் 300 படுக்கைகள் தயார் செய்யப்பட்டன. பின்னர், கூடுதல் வசதிகளுடன் அவசர விபத்து சிகிச்சை பிரிவை முழுவதும் கரோனா சிறப்பு சிகிச்சைக்காக மாற்றப்பட்டு 600 படுக்கைகள் தயார் செய்யப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக, சேதுராப்பட்டியில் அரசு பொறியியல் கல்லூரி, பாரதிதாசன் பல்கைக் கழக காஜாமலை வளாகம், திருவரங்கம் யாத்ரிநிவாஸ் ஆகியவற்றையும் கரோனா சிகிச்சைக்காக மருத்துவ முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்தநிலையில், திருச்சியில் மேற்கொள்ளப்படும் கரோனா சிகிச்சை தொடர்பாகவும், கூடுதல் தேவைகள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக தமிழக சுகாதாரத்துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்தார். 

அவரை திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு உள்ளிட்ட அலுவலர்கள் வரவேற்றனர். பின்னர், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு சென்ற ஜெ. ராதாகிருஷ்ணன், கரோனா வார்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை பார்வையிட்டார். சிறப்பு சிகிச்சை மையத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளையும் ஆய்வு செய்தார். 

பின்னர், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறையினருடன் கலந்தாலோசனை நடத்தினார். இந்த ஆய்வின்போது, ஆட்சியர் சு. சிவராசு, மருத்துவமனை டீன் வனிதா, கண்காணிப்பாளர் ஏகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.