கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திருச்சியில் ரெளடி வெட்டிக் கொலை

திருச்சியில் முன்விரோதம் காரணமாக 7 பேர் கொண்ட கும்பல் ரெளடியை வெட்டிக் கொலை செய்தது.

News image
ரௌடி விஜயன்.
Updated On :7 நவம்பர் 2020, 11:09 am

DIN

திருச்சியில் முன்விரோதம் காரணமாக 7 பேர் கொண்ட கும்பல் ரெளடியை வெட்டிக் கொலை செய்தது.

திருச்சி தில்லைநகர் வாமடம் பகுதியைச் சேர்ந்த சப்பானி மகன் வாழைக்காய் என்கிற விஜயன் (20). இவர் மீது திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பிரச்னை தொடர்பாக விஜயன் வீட்டில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் விஜயனை சரமாரியாக வெட்டியது. 

அவர்களிடமிருந்து தப்பி ஓடிய விஜயனை  மர்மச் சாலையில் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை தில்லைநகர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.