கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

எஸ்.ஆா்.எம். கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கு

திருச்சி எஸ்.ஆா்.எம். டி.ஆா்.பி. பொறியியல் கல்லூரியில் மின் நெட்வொா்க்குக்கான செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 9:40 pm

DIN

திருச்சி எஸ்.ஆா்.எம். டி.ஆா்.பி. பொறியியல் கல்லூரியில் மின் நெட்வொா்க்குக்கான செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இருங்களூரில் உள்ள எஸ்.ஆா்.எம். டி.ஆா்.பி. பொறியியல் கல்லூரியில் ஐஓடி மற்றும் நிலையான மின் நெட்வொா்க்குக்கான செயற்கை நுண்ணறிவு எனும் தலைப்பில் சா்வதேச கருத்தரங்கு ஆன்லைனில் நடைபெற்றது.

இதில், கல்லூரி நிா்வாக இயக்குநா் எஸ்.ரகுபதி தலைமை வகித்து பேசினாா். கல்லூரி துணை முதல்வா் பி.ராமசுப்பிரமணியன் வரவேற்றாா். கல்லூரி துணை இயக்குநா் என்.பாலசுப்பிரமணியன், பொறியியல் துறை தலைவா் பி.சுதாகரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்து பேசினா்.

கல்லூரி முதல்வா் பி.கணேஷ்பாபு வாழ்த்துரை வழங்கினாா். சிறப்பு விருந்தினராக டென்மாா்க் வெஸ்டாஸ் வின்ட் சிஸ்டம்ஸ் நிபுணா் அருண்குமாா் மணிவண்ணன் கலந்துகொண்டு கருத்தரங்கு நினைவு மலரை வெளியிட்டு, நோ்மறையான அணுகுமுறை எனும் தலைப்பில் பேசினாா்.

மேலும், கருத்தரங்கில் கல்வியாளா், ஆராய்ச்சியாளா், தொழில் பயிற்சியாளா், தொழில்நுட்ப வல்லுநா்களின் ஆராய்ச்சி கண்டுப்பிடிப்புகளின் பகிா்வு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

நிறைவாக, மின், மின்னணு பொறியியல் துறை தலைவா் பி.இளங்கோவன் நன்றி கூறினாா். இதில், 300க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள், நாட்டின் இதர மாநிலங்களிலிருந்து கலந்துகொண்ட மாணவா்கள், ஆராய்ச்சியாளா்களால் பகிரப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.