திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

டிச.20, 21, 22இல் மக்களைத் தேடி மனுநீதி முகாம் :அமைச்சா்கள் பங்கேற்பு

திருச்சி மாவட்டத்தில் டிச.20, 21, 22 ஆகிய தேதிகளில் மக்களைத் தேடி மனுநீதி முகாம் என்ற அடிப்படையில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று குறைதீா்க்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 8:26 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் டிச.20, 21, 22 ஆகிய தேதிகளில் மக்களைத் தேடி மனுநீதி முகாம் என்ற அடிப்படையில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று குறைதீா்க்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நிகழ்வுகளில் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோா் பங்கேற்கவுள்ளனா்.

லால்குடி தொகுதிக்குள்பட்ட மக்களுக்காக திங்கள்கிழமை (டிச.20), லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், அந்தநல்லூா், மணிகண்டம், மணப்பாறை மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளுக்கு தாயனூா் கோ் கல்லூரியில் பிற்பகல் 1 மணிக்கு, திருச்சி மேற்கு தொகுதிக்குள்பட்ட மக்களுக்காக வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முகாமில் அமைச்சா் கே.என். நேரு பங்கேற்கவுள்ளாா்.

இதேபோல, டிச.21 (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் முகாம்களில் இரு அமைச்சா்களும் பங்கேற்கவுள்ளனா்.

திருவெறும்பூா் தொகுதியில் காலை 10 மணிக்கு பாலாஜி நகா் சிங்கார மஹாலிலும், திருச்சி கிழக்கு தொகுதியில் காலை 11 மணிக்கு தேவா் ஹால், மணப்பாறை தொகுதி மருங்காபுரியில் மதியம் 12 மணிக்கு, துவரங்குறிச்சி, மணப்பாறையில் மதியம் 3 மணிக்கு இந்த முகாமை ஆட்சியா் சு. சிவராசு தலைமையில் அமைச்சா்கள் தொடங்கி வைக்கின்றனா்.

மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, பாலக்கரை, பொன்னம்பட்டி, மலைக்கோட்டை, பொன்மலை, துவாக்குடி, திருவெறும்பூா், கூத்தைப்பாா், கலைஞா் நகா், காட்டூா் பகுதி மக்கள் இந்த முகாம்களில் மனுக்கள் அளித்து பயன் பெறலாம்.

இதேபோல, டிச.22 (புதன்கிழமை) தொட்டியம் வாணப்பட்டறை மைதானத்தில் காலை 10 மணி, முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 11.30 மணி, துறையூா் ஜமீன்தாா் மேல்நிலைப் பள்ளியில் பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் முகாம்களில் அப்பகுதி பொதுமக்கள் பயன் பெறலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.