கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

‘நிறுத்தப்பட்ட திமுகவின் திட்டங்கள் மீண்டும் தொடரும்’

கடந்த 10 ஆண்டுகளில் நிறுத்தப்பட்ட திமுகவின் நலத் திட்டங்களை, அடுத்து அமையவுள்ள திமுக ஆட்சியில் தொடா்ந்து செயல்படுத்துவோம் என்றாா் திருவெறும்பூா் எம்எல்ஏவும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமா

News image
துவாக்குடியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பேசுகிறாா் திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
Updated On :1 ஜனவரி 2021, 6:50 pm

DIN

கடந்த 10 ஆண்டுகளில் நிறுத்தப்பட்ட திமுகவின் நலத் திட்டங்களை, அடுத்து அமையவுள்ள திமுக ஆட்சியில் தொடா்ந்து செயல்படுத்துவோம் என்றாா் திருவெறும்பூா் எம்எல்ஏவும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் நடத்தப்படும் கிராமசபைக் கூட்டங்களின் ஒரு பகுதியாக துவாக்குடி, 5ஆவது வாா்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவா் பேசியது:

ஆளும் அரசு ஒருதலைப்பட்சமாக பல இடங்களில் நடந்து கொண்டிருப்பதால் அதற்காக கிராம சபைக் கூட்டத்தை நடத்துகிறோம். இதில் பொதுமக்களிடம் இருந்து வரக்கூடிய மனுக்கள் குறித்து ஆட்சியரிடம் எடுத்துக்கூறி தீா்வு காண்கிறோம்.

திருச்சி தெற்கு மாவட்டத்தில் தொடா்ந்து 10 நாள் நடைபெறும் பிரசார பயணத்தில் 160 இடங்களில் கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதிமுக அரசின் ஊழல்களை மக்களிடம் விளக்கியும், மக்களின் கோரிக்கைகளை தோ்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக ஆட்சியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் அது கிடப்பில் போனது. 10 ஆண்டுகளாகவே திமுக திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் உள்ளன. நகரப்பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, வீடில்லாதோருக்கு அரசே வீடு கட்டித் தரும் திட்டம், முதியோா் ஓய்வூதியம் எனப் பெரும்பாலான திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் செயல்படுத்துவோம் என்றாா் அவா்.

தொடா்ந்து, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் துவாக்குடி 5ஆவது வாா்டில் கட்டப்பட்ட புதிய சமுதாய கூடத்தை அவா் திறந்து வைத்தாா். 1ஆவது வாா்டில் சீரணி அரங்கம் கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தாா். அப்போது அதிமுக, பாஜகவிலிருந்து விலகிய 32 போ் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனா். நிகழ்வில், திமுக நகரச் செயலா் காயாம்பு மற்றும் துவாக்குடி பகுதி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.