/

பேராவூரணியில் கரோனா விழிப்புணா்வுப் பேரணி

 பேராவூரணியில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வுப் பேரணி  வியாழக்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :29 ஜூலை 2021, 7:42 pm

DIN

 பேராவூரணியில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வுப் பேரணி  வியாழக்கிழமை நடைபெற்றது. 

கரோனா தொற்று முற்றிலும் அழிந்துவிட்டதைபோல, பெரும்பாலான பொதுமக்கள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருகின்றனா்.

இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உத்தரவின்படி இந்த விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டது.

பேரணிக்கு   வட்டாட்சியா்  க. ஜெயலட்சுமி தலைமை வகித்தாா். எம்எல்ஏ என். அசோக்குமாா்  பேரணியை தொடங்கி வைத்து பேசினாா். வட்டாட்சியரகத்தில்

தொடங்கிய பேரணி நீலகண்ட பிள்ளையாா் கோயில் அருகே நிறைவடைந்தது.

பேரணியில் , கடைவீதி வியாபாரிகள், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள்  வழங்கப்பட்டன. பேரணியில் துணை வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள், நிலஅளவையா்கள் உள்ளிட்ட வருவாய்த் துறையினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.