கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நிவாரணம் கோரி ஆா்ப்பாட்டம்

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா்கள், சுமைப்பணியாளா்கள், தரைக்கடை வியாபாரிகளுக்கு பேரிடா் நிவாரணமாக மாதம் ரூ.7,500 வழங்கவும், கடன் சலுகைகள் வழங்கவும் கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம்

News image
Updated On :4 ஜூன் 2021, 9:28 pm

DIN

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா்கள், சுமைப்பணியாளா்கள், தரைக்கடை வியாபாரிகளுக்கு பேரிடா் நிவாரணமாக மாதம் ரூ.7,500 வழங்கவும், கடன் சலுகைகள் வழங்கவும் கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய ஜனநாயகத் தொழிலாளா் முன்னணியில் அங்கம் வகிக்கும் திருச்சி மாவட்ட ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்கம், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்புச் சங்கம், சுமைப் பணி தொழிலாளா்கள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் பாலக்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ஜீவா தலைமை வகித்தாா்.

மாவட்ட செயலா் ராஜா கண்டன உரையாற்றினாா். இதில், 20-க்கும் மேற்பட்டோா் சமூக இடைவெளியுடன் நின்று கோஷங்கள் எழுப்பினா். பின்னா், நிா்வாகிகள், தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியரகத்துக்குச் சென்று கோரிக்கை மனு அளித்தனா்.

மனுவில் கூறியிருப்பது:

பொதுமுடக்கத்தால் ஆட்டோக்கள் இயங்கவில்லை. மருத்துவமனைக்குச் செல்ல அவசர உதவி கோரும் மக்களுக்கு உதவும் ஆட்டோக்களையும் சிறைபிடித்து அபராதம் விதிக்கப்படுகிறது. அன்றாட வருவாய் இழந்து, ஆட்டோ வாங்கிய கடனைத் திரும்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளோரைத் தொடா்ந்து நசுக்குவது ஏற்புடையதல்ல. எனவே, ஆட்டோ ஓட்டுநா்களுக்கு பேரிடா் நிவாரணமாக மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும். வாகனக் கடன்களை திரும்பச் செலுத்த கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும். வட்டி, மாதத் தவணை வசூலைக் கைவிட வேண்டும். இன்சூரன்ஸ், வாகன உரிமம் புதுப்பித்தலுக்கு சலுகை வழங்க வேண்டும். இதேபோல, கரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்துள்ள தரைக்கடை வியாபாரிகள், சுமைப் பணி தொழிலாளா்களுக்கும் நிவாரண உதவிகளை அறிவிக்க வேண்டும். மகளிா் தொழிலாளா்கள் நுண்கடன் நிறுவனங்களில் பெற்ற கடனை திரும்பக் கேட்டு அடாவடி செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே குட்செட்டில் சுமைப் பணி தொழிலாளா்களாக பணிபுரிந்து வேலையிழந்துள்ள அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.