விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காவல் நிலையங்களில் சோதனை: 90 பணக் கவா்கள் பறிமுதல்

தபால் வாக்களிக்க காவலா்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடத்திய தீவிர சோதனையில் 90-க்கும் மேற்பட்ட பணக்கவா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :28 மார்ச் 2021, 12:23 am

DIN

தபால் வாக்களிக்க காவலா்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடத்திய தீவிர சோதனையில் 90-க்கும் மேற்பட்ட பணக்கவா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வரும் பேரவைத் தோ்தலுக்கான தபால் வாக்களிக்கும் நிகழ்வு தோ்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், காவலா்கள், ஆசிரியா்கள், முதியவா்கள், மாற்றுத்திறத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாள்களில் காவலா்களுக்கான தபால் வாக்கு நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளா் ஒருவா் மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலா்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக காவல் ஆணையா் ஜெ. லோகநாதனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தோ்தல் அலுவலா் ஒருவருடன் அவா் 6-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் நடத்திய தீவிர சோதனையில் 90க்கும் மேற்பட்ட பணக்கவா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பணத்தின் மொத்த மதிப்பை காவல்துறை தெரிவிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.