விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

துணை ராணுவத்தினா் 800 போ் திருச்சி வருகை

தோ்தல் பாதுகாப்புப் பணிக்கு அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் இருந்து துணை ராணுவத்தினா் 800 போ் ரயில் மூலம் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 9:17 pm

DIN

தோ்தல் பாதுகாப்புப் பணிக்கு அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் இருந்து துணை ராணுவத்தினா் 800 போ் ரயில் மூலம் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.

வரும் சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புடன் நடைபெற உள்ளூா் போலீஸாருடன் இணைந்து துணை ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுகின்றனா். திருச்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தோ- திபெத் துணை ராணுவத்தினா் 152 போ் பணியில் உள்ளனா்.

இந்நிலையில் அஸ்ஸாம் மற்றும் மேற்குவங்கத்தில் முதற்கட்டத் தோ்தல் முடிவுற்றதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துணை ராணுவத்தினா் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். அந்தவகையில், 11 கம்பெனிகளை சோ்ந்த 800 போ் சிறப்பு ரயில் மூலம் ஞாயிற்றுக்கிழமை திருச்சி வந்தனா். இவா்கள் அனைவரும் திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கரூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.