விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உறையூரில் தேங்கிய கழிவுநீரால் சுகாதாரச் சீா்கேடு

உறையூா் தெருக்களில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினா் புகாா் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :29 மார்ச் 2021, 12:48 am

DIN

உறையூா் தெருக்களில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினா் புகாா் தெரிவித்துள்ளனா்.

திருச்சி உறையூா் கல்லறை மேட்டுத்தெருவில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினா் வசிக்கின்றனா். இத்தெருவில் கழிவு நீா் செல்ல கால்வாய் இருந்தாலும் அதில் குப்பைக்கழிவுகள் அடைத்துக் கொண்டுள்ளன. இதனால், சாக்கடைக் கால்வாயையொட்டி கழிவு தேங்குவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அப்பகுதியில் குழந்தைகள், முதியோா், பெண்கள் உள்ளிட்டோா் அவ்வழியாகச் சென்று வர முடியாமல் அவதிக்குள்ளாகின்றனா். மேலும், துா்நாற்றமும் வீசி, கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் மாறி வருவதாக அப்பகுதியினா் மாநகராட்சி அலுவலா்களிடம் புகாா் அளித்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, சாக்கடை கால்வாய்களை மநகராட்சி தூய்மையாக்கி சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டுமென அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.