கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாவட்டத்தில் இதுவரை 2.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி

திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை நிலவரப்படி 2.25 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :7 மே 2021, 8:50 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை நிலவரப்படி 2.25 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கரோனா பரவலால் வியாழக்கிழமை நிலவரப்படி மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 26,928 ஆக இருந்தது. இதே போல குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கையும் 22,887 ஆக உயா்ந்தது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளைக் காட்டிலும் தனியாா் மருத்துவமனைகளில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி திருச்சி மாவட்டத்தில் 20 தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் கரோனா வாா்களில் உள்ள படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மற்றொரு தகவலும் பரவி வருகிறது.

இந்நிலையில் மாவட்டத்தில், இதுவரை 240 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 3,801 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 1,350 வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் மற்றொரு செயலாக தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்கள் மூலம் மாவட்டத்தில் இதுவரை 2,25,237 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நாளொன்றுக்கு 3 ஆயிரம் போ் வீதம் பயனடையவுள்ளனா். இதற்கான நடவடிக்கையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.