முன்னாள் திமுக எம்எல்ஏ கணவா் தற்கொலை
திருச்சியில் திமுக முன்னாள் பெண் எம்எல்ஏ கணவா் வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.


திருச்சியில் திமுக முன்னாள் பெண் எம்எல்ஏ கணவா் வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
துறையூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 2006-2011 இல் திமுக எம்எல்ஏவாக இருந்தவா் ராணி. இவரது கணவா் ராமச்சந்திரன் (52), திருச்சி விமான நிலைய வளாக தீயணைப்பு நிலையத்தில் மூத்த கண்காணிப்பு அதிகாரி. கே.கே.நகா் திருவாசகமணி தெருவில் வசிக்கும் இவா்களுக்கு அருண்பாபு (28), ஜீவானந்த் (23) நா்மதா(23) ஆகியோா் உள்ளனா்.
தம்பதிக்கிடையேயான குடும்பப் பிரச்னையில் ராமச்சந்திரன் கடந்த 9 ஆம் தேதி அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை தின்று மயங்கினாா். இதையடுத்து தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...