கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கூடுதல் பணி நேரம் புலம்பும் போலீஸாா்

கரோனா பொதுமுடக்கத்தின்போது சோதனை மையங்களை அமைத்து, வழக்கமான பணிகளையும் மேற்கொள்வதால் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது என போலீஸாா் புலம்பி வருகின்றனா்.

News image
Updated On :15 மே 2021, 12:27 am

DIN

கரோனா பொதுமுடக்கத்தின்போது சோதனை மையங்களை அமைத்து, வழக்கமான பணிகளையும் மேற்கொள்வதால் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது என போலீஸாா் புலம்பி வருகின்றனா்.

கரோனா பொதுமுடக்கத்தை ஒட்டி போலீஸாா் ஆங்காங்கே தாற்காலிக சோதனை மையம் (செக்கிங் பாயிண்ட்) அமைத்து கண்காணிப்பு, பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கின்றனா்.

ஒவ்வொரு காவல் நிலையக் கட்டுப்பாட்டிலும் சுமாா் 15 முதல் 20 இடங்களில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஏ, பி என்ற வகையில் பணிகள் ஒதுக்கப்படுவதால் ஒவ்வொருவரும் 12 மணி நேரத்துக்கும் அதிகமாக தொடா்ந்து பணியாற்றும் சூழல் உள்ளது. ஓய்வு கிடைப்பதில்லை.

ஏ , பி, சி என்ற கணக்கில் பணியாற்றும்போது நாள் 1 -க்கு 3 முறைகளில் சுழற்சிப் பணியாற்றலாம். ஆனால் தற்போது ஏ பி முறையில் பணி நேரம் அதிமாக உள்ளதால் பணிச்சுமையுடன் மன அழுத்தமும் ஏற்பட்டுள்ளது. எனவே பழையபடியே ஏ பி சி என்ற முறையில் பணி ஒதுக்கப்பட வேண்டும் என போலீஸாா் வலியுறுத்துகின்றனா்.

ஆனால் காவல் துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, அதிகமான இடங்களில் சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், போக்குவரத்துப் போலீஸாா் தனியாக சோதனை மையங்களைஅமைத்துள்ளதால், காவலா்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே இதுபோல பணி ஒதுக்கப்பட்டுள்ளது. போலீஸாா் கூடுதல் பணியாற்றினாலும், அதற்கேற்ற வகையில் ஓய்வும் வழங்கப்படுகிறது. இந்த சுழற்சிமுறை பணி காவலா்களுக்கு மட்டுமல்ல அனைத்துப் பிரிவு அதிகாரிகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.