மாவட்ட மக்கள் தொடா்பு அலுவலா் இடமாற்றம்
திருச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் வெள்ளிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டாா்.


திருச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் வெள்ளிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டாா்.
இதுகுறித்து அரசு செயலா் மகேசன் காசிராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிா்வாக நலன் கருதி திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாக அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக இருந்த ஆ. ரவிச்சந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழகம் கோவை லிமிடெட், ஈரோடு மண்டல அலுவலகத்தில் மக்கள் தொடா்பு அலுவலராக பணியமா்த்தப்படுகிறாா். அவா்தம் பொறுப்பிலிருந்து மே 28 பிற்பகல் முதல் அவரை விடுவித்து ஆணையிடப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக பொறுப்பேற்கவுள்ள மாவட்ட மக்கள் செய்தி தொடா்பாளா் குறித்து அவ்வாணையில் எதுவும் குறிப்பிடவில்லை. 2 நாள்களுக்கு முன் ஆ. ரவிச்சந்திரன் பணியில் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...