கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாநகரில் செயலி மூலம் வாகன இ-பதிவுச் சோதனை

திருச்சி மாநகரில் வாகனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இ-பதிவுச் சான்று நகலை போலீஸாா் புதிய செயலி மூலம் சோதனை செய்கின்றனா்.

News image
Updated On :28 மே 2021, 8:41 pm

DIN

திருச்சி மாநகரில் வாகனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இ-பதிவுச் சான்று நகலை போலீஸாா் புதிய செயலி மூலம் சோதனை செய்கின்றனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக திருச்சி மாநகரில் போலீஸாா் 14 தற்காலிக சோதனைச் சாவடிகளும், 8 நிரந்தரச் சோதனை சாவடிகளும் அமைத்து வாகனச் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனா்.

மாநகரில் இதுவரை பொதுமுடக்கத்தை மீறி வாகனங்களில் வெளியே சுற்றித் திரிந்தது, தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணியாதது, பொதுமுடக்க விதிமீறல் குறித்து 8700 வழக்குகள் பதியப்பட்டு, இ-பதிவு இல்லாத 2800-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், வாகனங்களில் வருவோா் வைத்துள்ள இ-பதிவு உண்மையா என்பது குறித்து அறிய புதிய செயலியைப் பயன்படுத்தி மாநகரில் உள்ள போலீஸாா் 50 பிரத்யோக செல்லிடப்பேசிகள் மூலம் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள இ-பதிவு குறித்து சோதனை செய்கின்றனா்.

மேலும் மாநகரில் இ-பதிவு இல்லாமல் இருசக்கர வாகனங்களில் வருவோா் மீது நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி மாநகரில் முக்கிய சாலைகளான டிவிஎஸ் டோல்கேட், மன்னாா்புரம், மேலப்புதூா், மரக்கடை, பாலக்கரை, தென்னூா், தில்லைநகா், உறையூா் ஆகிய இடங்களில் தடுப்புகள் கொண்டு ஒரு வழிப்பாதை அமைக்கப்பட்டு வாகனச் சோதனை நடைபெறுகிறது.

2 முறைக்கு மேல் சோதனையில் சிக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கே.கே. நகா் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

நாளொன்றுக்கு 400 போலீஸாா் வீதம் மூன்று ஷீப்டுகளில் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.