இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

திருச்சி விமான நிலையத்தில் ரூ.59 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல் : இருவர் கைது

துபையில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது.

News image
கோப்புப் படம்
Updated On :5 அக்டோபர் 2021, 7:41 am

DIN

துபையில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது.

இதனையடுத்து பயணிகளையும் பயணிகளின் உடமைகளையும் சுங்கத்துறை,வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

இதில், தஞ்சாவூரைச் சேர்ந்த பிரகாஷ், ராமநாதபுரத்தை   சேர்ந்த கர்ணன் பால்பாண்டி ஆகிய  பயணிகளில் இருவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர்களிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில் இருவரும்,  தங்கத்தை பசை வடிவில் மாற்றி உடலுக்குள் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அதனையடுத்து  இருவரையும் கைது செய்து, தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

கடத்தி வரப்பட்ட தங்கம், 1252 கிராம் எடையில் இருந்தது. அதன் மதிப்பு ரூ.59 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.