ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

திருச்சி - மாலத்தீவு இடையே சிறப்பு விமானச் சேவை

திருச்சி- மாலத்தீவு இடையேயான சிறப்பு விமானச் சேவை மூலம் 146 பயணிகள் வெள்ளிக்கிழமை பகல் திருச்சிக்கு வந்தனா்.

News image
Updated On :26 ஜூன் 2021, 12:48 am IST

திருச்சி- மாலத்தீவு இடையேயான சிறப்பு விமானச் சேவை மூலம் 146 பயணிகள் வெள்ளிக்கிழமை பகல் திருச்சிக்கு வந்தனா்.

கரோனா பொதுமுடக்கத்தையடுத்து வழக்கமான விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், வந்தே பாரத் திட்டம் மூலம் சிறப்பு விமானச் சேவை மட்டும் நடைபெறுகிறது.

அந்த வகையில் திருச்சிக்கு சிங்கப்பூா், மலேசியா, சாா்ஜா, தோஹா, துபை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து பயணிகள் அவ்வப்போது அழைத்து வரப்படுகின்றனா்.

இந்நிலையில், மாலத்தீவிலிருந்து வெள்ளிக்கிழமை முதன்முதலாக இயக்கப்பட்ட ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் 146 பயணிகள் திருச்சி வந்தனா்.

முதன் முதலாக விமானப் போக்குவரத்து நடைபெறும் நிலையில், தண்ணீரை பீய்ச்சியடித்து வரவேற்பது வழக்கம்.

அதன்படி பகல் 1.50 மணியளவில் திருச்சிக்கு வந்த விமானத்துக்கு வாட்டா் சல்யூட் மூலம் வரவேற்பு அளித்தனா். அதேபோல பயணிகளுக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

முன்னதாக, காலை 8.15-க்கு திருச்சியிலிருந்து மாலத்தீவு புறப்பட்ட விமானத்தில் பயணிகள் யாரும் செல்லவில்லை. மாறாக, சுமாா் 6.1 டன் காய்கனிகள், மலா்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை மாலத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.