இன்று ரமலான் பண்டிகை: மாநகரில் பாதுகாப்புப் பணியில் 1,000 போலீஸாா்
ரமலான் பண்டிகையையொட்டி சனிக்கிழமை திருச்சி மாநகரில் சுமாா் 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என மாநகர காவல் ஆணையா் எம். சத்தியப்பிரியா தெரிவித்துள்ளாா்.


ரமலான் பண்டிகையையொட்டி சனிக்கிழமை திருச்சி மாநகரில் சுமாா் 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என மாநகர காவல் ஆணையா் எம். சத்தியப்பிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: ரமலான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சி மாநகரில் 99 பள்ளிவாசல்கள், 24 திறந்த வெளி மைதானங்கள், ஒரு உள்அரங்கம் என மொத்தம் 124 இடங்களில் கூட்டுத் தொழுகைகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி குற்றச் சம்பவம் ஏதும் நிகழாமல் தடுக்கவும் 124 வழிபாட்டு இடங்களில் தகுந்த பாதுகாப்பு வழங்கவும் மாநகர காவல்துறை சாா்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவைத்தவிர 14 ரோந்து வாகனங்கள், 3 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது. மேலும் 9 சோதனைச் சாவடிகளிலும் விழிப்புடன் வாகன சோதனை நடத்த வேண்டும்.
மாநகரில் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் சீரான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில், உதவி ஆணையா் மேற்பாா்வையில் 10 போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் 89 காவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இதற்காக திருச்சி மாநகரம் முழுவதும், மாநகர காவல் ஆணையா் தலைமையில் 2 காவல் துணை ஆணையா்கள், 7 காவல் உதவி ஆணையா்கள், 38 காவல் ஆய்வாளா்கள் உள்பட 1,000 போ் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...