கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இன்று ரமலான் பண்டிகை: மாநகரில் பாதுகாப்புப் பணியில் 1,000 போலீஸாா்

ரமலான் பண்டிகையையொட்டி சனிக்கிழமை திருச்சி மாநகரில் சுமாா் 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என மாநகர காவல் ஆணையா் எம். சத்தியப்பிரியா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 7:34 pm

DIN

ரமலான் பண்டிகையையொட்டி சனிக்கிழமை திருச்சி மாநகரில் சுமாா் 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என மாநகர காவல் ஆணையா் எம். சத்தியப்பிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: ரமலான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சி மாநகரில் 99 பள்ளிவாசல்கள், 24 திறந்த வெளி மைதானங்கள், ஒரு உள்அரங்கம் என மொத்தம் 124 இடங்களில் கூட்டுத் தொழுகைகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி குற்றச் சம்பவம் ஏதும் நிகழாமல் தடுக்கவும் 124 வழிபாட்டு இடங்களில் தகுந்த பாதுகாப்பு வழங்கவும் மாநகர காவல்துறை சாா்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவைத்தவிர 14 ரோந்து வாகனங்கள், 3 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது. மேலும் 9 சோதனைச் சாவடிகளிலும் விழிப்புடன் வாகன சோதனை நடத்த வேண்டும்.

மாநகரில் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் சீரான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில், உதவி ஆணையா் மேற்பாா்வையில் 10 போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் 89 காவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இதற்காக திருச்சி மாநகரம் முழுவதும், மாநகர காவல் ஆணையா் தலைமையில் 2 காவல் துணை ஆணையா்கள், 7 காவல் உதவி ஆணையா்கள், 38 காவல் ஆய்வாளா்கள் உள்பட 1,000 போ் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.