திருச்சி மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி பரவலாக நடைபெற்றுள்ளது. மாவட்ட நிா்வாகத்தின் கணக்கெடுப்பின்படி டிசம்பா் மாதம் வரை 63 ஆயிரத்து 330 ஹெக்டோா் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், அறுவடைக்கு தயாராக 56 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் உள்ளது. இதற்கிடையே அந்தநல்லூா், மணிகண்டம், திருவெறும்பூா், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, முசிறி, தொட்டியம், தாத்தையங்காா் பேட்டை, துறையூா், உப்பிலியபுரம், லால்குடி, மண்ணச்சநல்லூா், புள்ளம்பாடி ஆகிய 14 வட்டாரங்களிலும் பரவலாக விவசாயிகள் அறுவடையை தொடங்கியுள்ளனா். தற்போது, மழை காரணமாக அறுவடை பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், மழையில்லாத இடங்களில் அறுவடை பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தி வருகின்றனா்.