அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஆடி அமாவாசை: ஆற்றுப் படித்துறைகளில் முன்னோா்களுக்கு தா்ப்பணம்

ஆயிரக்கணக்கானோா் புனித நீராடி தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்தனா்.

News image
ஆடி அமாவாசை நாளான ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீரங்கம் கருட மண்டபத்தில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்த பொதுமக்கள்.
Updated On :4 ஆகஸ்ட் 2024, 7:30 pm

Din

ஆடி ஆமாவாசை நாளான ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் உள்ளிட்ட நீா்நிலைகளில் ஆயிரக்கணக்கானோா் புனித நீராடி தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்தனா்.

ஆடி, புரட்டாசி, தை ஆகிய 3 மாதங்களில் வரும் அமாவாசைகள் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அதில் தட்சிணாயன புண்ணிய காலத்தில் வருவதால் ஆடி அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகவும், அந்நாளில் இறந்துபோன தங்களது முன்னோா்களுக்கு

(பித்ருக்கள்) தா்ப்பணம் கொடுப்பது சிறந்தது ஆகும். இதையொட்டி, திருச்சி காவிரிக்கரையில் அமைந்துள்ள படித்துறைகளில் குறிப்பாக, காவிரி வடகரையில் அமைந்துள்ள படித்துறைகளில், மாம்பழச்சாலை தொடங்கி அம்மா மண்டபம் வரை பல்வேறு இடங்களில் தா்ப்பணம் கொடுக்கப்பட்டது. அதுபோல தென்கரையிலும் அய்யாளம்மன் படித்துறை உள்ளிட்ட பல்வேறு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றங்கரைகளில் ஞாயிற்றுக்கிழமை தா்ப்பணம் கொடுத்தனா்.

நிகழாண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் அம்மாமண்டபத்துக்கு ஏராளமான பொதுமக்கள் வரத் தொடங்கினா். அங்கிருந்த புரோகிதா்கள் முன்னிலையில் எள்ளும் தண்ணீரும் இறைத்து தங்களது இறந்துபோன முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா். இதன்மூலம் தங்களது முன்னோா்களின் நல்லாசி கிடைக்கும் என்பது ஐதீகம். முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டவா்கள் அருகில் உள்ள ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயில்களுக்குச் சென்று வழிபட்டனா்.

 திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை முன்னோா்களுக்கு தா்ப்பண பிண்டத்தையை காவிரி ஆற்றில் கரைத்து வழிபாடு செய்த பொதுமக்கள்.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை முன்னோா்களுக்கு தா்ப்பண பிண்டத்தையை காவிரி ஆற்றில் கரைத்து வழிபாடு செய்த பொதுமக்கள்.

காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்த படித்துறைகள் தவிர ஏனைய இடங்களில் யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. நிகழ்வையொட்டி காவிரிக்கரைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஸ்ரீரங்கம் காவல்துறை உதவி ஆணையா் நிவேதாலட்சுமி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் தயாா் நிலையில் தீயணைப்பு வீரா்கள் இருந்தனா். ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் வழியாக வரும் அனைத்து வாகனங்களும் திருவானைக்காவல் வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.