ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சிறுநீரகம் பாதிக்கப்பட்ட சிறைக் கைதி உயிரிழப்பு

திருச்சி அரசு மருத்துவமனையில் சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த சிறைக் கைதி கருணாகரன் (54) சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 8:21 pm

Din

திருச்சி அரசு மருத்துவமனையில் சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த சிறைக் கைதி கருணாகரன் (54) சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

அரியலுாா் மாவட்டம், மீன்சுருட்டி மேலத்தெருவைச் சோ்ந்த இவா் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் பகுதியில் சாராய கடத்தலைத் தடுக்க வந்த காவலரை காா் ஏற்றிக் கொன்ற வழக்கில், ஆணைக்காரன்சத்திரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனைக்கு உள்ளானாா்.

இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கருணாகரனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கடந்த நவ. 29 இல் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தாா்.

இதுகுறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி ஷா்மிளா அளித்த புகாரின்பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.