ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மருத்துவமனையில் இருசக்கர வாகனம் திருடியவா் கைது

திருச்சி மாவட்டம் முசிறி அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனம் திருடிய இளைஞரை முசிறி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 8:48 pm

Din

திருச்சி மாவட்டம் முசிறி அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனம் திருடிய இளைஞரை முசிறி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

முசிறி ரத்தினம் நகரைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (55). இவா் டிச. 9 ஆம் தேதி தனது மனைவியை முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றாா். பின்னா் சிகிச்சை முடிந்து திரும்பியபோது மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் முசிறி போலீஸாா் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில் இருசக்கர வாகனத்தை திருடியதாக தொட்டியம் கோட்டைமேடு பகவதி அம்மன் கோயில் தெருவை சோ்ந்த சுப்ரமணியன் மகன் விஜய் (25) என்பவரை கைது செய்து, இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.