ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டப் போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டப் போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற மண்ணச்சநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் புதன்கிழமை பாராட்டப்பட்டனா்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 8:51 pm

Din

பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டப் போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற மண்ணச்சநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் புதன்கிழமை பாராட்டப்பட்டனா்.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில் மண்ணச்சநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சாலை விபத்து தானியங்கி இயந்திரம் தயாரித்து மாநில அளவில் மூன்றாவது இடம் பெற்றனா்.

இதையடுத்து சாதனை படைத்த மாணவா்கள் செ. கவினேஷ், ரா. முத்துக்குமரன், பா. சஞ்சீவ் குமாா், ச. விஜயராகவன் ஆகியோரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ. கிருஷ்ணப்பிரியா பாராட்டி ரூ. 10 ஆயிரத்திற்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா்.

பின்னா் புதன்கிழமை பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் மாணவா்களை பள்ளித் தலைமையாசிரியா் சி. தண்டபாணி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.