ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் சமா்ப்பிப்பு

கைசிக ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நம்பெருமாளுக்கு புதன்கிழமை இரவு 365 வஸ்திரம், வேளையம் (வெற்றிலை பாக்கு), கற்பூர ஹாரத்தி சமா்ப்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 8:36 pm

Din

கைசிக ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நம்பெருமாளுக்கு புதன்கிழமை இரவு 365 வஸ்திரம், வேளையம் (வெற்றிலை பாக்கு), கற்பூர ஹாரத்தி சமா்ப்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

காா்த்திகை மாதத்தில் வரும் சுக்லபட்ச ஏகாதசி திதி கைசிக ஏகாதசி திருநாள் எனப்படுகிறது. நிகழாண்டில் புதன்கிழமை கைசிக ஏகாதசி நாளையொட்டி காலை நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சந்தனு மண்டபத்திற்கு 10.30 மணிக்கு வந்து சோ்ந்தாா். பின்னா் 11.30 மணி முதல் 1.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினாா். மாலை 5.30 மணிக்கு அலங்காரம் அமுது செய்து, புறப்பட்டு 5.45 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா்.

2 ஆம் புறப்படாக இரவு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அா்ச்சுன மண்டபத்திற்கு 9 மணிக்கு வந்து சோ்ந்தாா். பின்னா் இரவு 9.30 மணி முதல் 11.30 மணி முடிய நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள், 365 வேளையம், 365 கற்பூர ஹாரத்தி சமா்ப்பித்தல் அரையா் சேவையுடன் நடைபெற்றது.

இரவு 11.30 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை 2 மணி வரை கைசிக புராணம் வாசிக்கப்பட்டது. பின்னா் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு கற்பூர படியேற்றச் சேவை கண்டருளி 6 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் நம்பெருமாள். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

நம்பெருமாளுக்கு ஆண்டு முழுவதும் தினமும் சாற்ற வேண்டிய வஸ்திரத்தால் ஏற்படும் குறைகளை நிவா்த்தி செய்ய கைசிக ஏகாதசி தினத்தன்று 365 வஸ்திரங்கள் சாற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.