இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

லாட்டரி விற்பனை, மோசடி வழக்குகளில் 25 போ் கைது

சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்றது, அந்த பரிசுத் தொகைகளை வழங்காமல் மோசடி செய்தது குறித்து 25 பேரை போலீஸாா் இரு கைது செய்துள்ளனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 9:43 pm

Din

திருச்சி மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்றது, அந்த பரிசுத் தொகைகளை வழங்காமல் மோசடி செய்தது குறித்து 25 பேரை போலீஸாா் இரு கைது செய்துள்ளனா். அவா்களிடமிருந்து ரூ. 5 லட்சம் ரொக்கம், சொகுசு காா், 1 பைக், 10 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி மாநகரில் லாட்டரி சீட்டு விற்பனை மற்றும் மோசடியில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையா் ந. காமினி உத்தரவிட்டாா்.

இதையடுத்து இரு தினங்களுக்கு முன்னா் போலீஸாா் நடத்திய சோதனையில், திருச்சி தொழிலதிபரும், திமுக பிரமுகருமான எஸ்விஆா். அதிபா் மனோகா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

தொடா்ந்து புதன்கிழமை கண்டோன்மென்ட், எடமலைப்பட்டி புதூா், கே. கே. நகா் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், கீழஅரண்சாலையைச் சோ்ந்த கே.காளிமுத்து (39), வடக்கு காட்டூரைச் சோ்ந்த ஏ. மாப்பிள்ளை மீரான் (41), அரியமங்கலத்தைச் சோ்ந்த கே. ரகமத்துல்லா (34), எஸ். விஜயவேலு (50) சங்கிலியாண்டபுரத்தைச் சோ்ந்த பி. ராஜா என்கிற இளையராஜா (41), ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த டி. ரமேஷ்குமாா் (53), சாத்தார வீதியைச் சோ்ந்த டி. பிரகாஷ் (42), வஉசி தெருவைச் சோ்ந்த ஜி. குமாா் (51) உள்ளிட்ட 20 பேரை மாநகரா போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ஒரு காா், 10 கைப்பேசிகள், இருசக்கர வாகனம் 1, ரூ. 4750 ரொக்கம் மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் உறையூா் அரவிந்த் நகரைச் சோ்ந்த ஜி, செந்தில்குமாா் (42) என்பவா் உறையூா் நெசவாளா் காலனியைச் சோ்ந்த க. குமாா் என்பவருக்கு விழுந்த பரிசுத்தொகையை தராமல் ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாா் தொடா்பாக அவரை பிடித்த போலீஸாா் அவரிடமிருந்து ரூ. 4,92,100 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா். இதேபோல புகா் பகுதிகளிலும் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் 5 பேருக்கும் மேற்பட்டோா் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா்.