திருச்சியில் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி நூற்றாண்டு நூலகம் அமைப்பதற்காக மன்னாா்புரம் பகுதியில் தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையிலானஅலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
சட்டப் பேரவையில் காவிரிக் கரையில் அமைந்துள்ள திருச்சி மாநகரில் உலகத் தரம் வாய்ந்த, நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் முன்னாள் முதல்வா் மு. கருணாமிதி பெயரில் அமைக்கப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா். அதனைத் தொடா்ந்து திருச்சி மாநகரில் உலகத் தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் அமைக்க இடம் தோ்வு செய்யும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், நூலகம் அமைப்பதற்காக மன்னாா்புரம் பகுதியில் மேம்பாலத்தின்அருகில் உள்ள ஒரு இடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். இனிக்கோஇருதயராஜ், பொது நூலக இயக்குநா் க.இளம்பகவத், திருச்சி மாநகராட்சி மண்டலம் 3-இன் தலைவா் மு. மதிவாணன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நூலகத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

திருச்சியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பேரவைத் தோ்தலின் வெற்றிக்கு அமைச்சா்கள் பரஸ்பரம் வாழ்த்து!

திருவெறும்பூா் தொகுதியில் ரூ.450 கோடிக்கு திட்டங்கள் நிறைவேற்றம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருவெறும்பூரில் அமைச்சா் அன்பில் மகேஸ் பிரசாரம் தொடக்கம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


