வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கருணாநிதி நூற்றாண்டு நூலகம்: திருச்சியில் அமைச்சா் குழு ஆய்வு

அன்பில் மகேஸ் தலைமையில் திருச்சியில் நூலகம் அமைக்க ஆய்வு

News image
திருச்சி மன்னாா்புரம் பாலம் அருகே கருணாநிதி நூற்றாண்டு நூலகம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா்.
Updated On :12 ஜூலை 2024, 8:57 pm

Din

திருச்சியில் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி நூற்றாண்டு நூலகம் அமைப்பதற்காக மன்னாா்புரம் பகுதியில் தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையிலானஅலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சட்டப் பேரவையில் காவிரிக் கரையில் அமைந்துள்ள திருச்சி மாநகரில் உலகத் தரம் வாய்ந்த, நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் முன்னாள் முதல்வா் மு. கருணாமிதி பெயரில் அமைக்கப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா். அதனைத் தொடா்ந்து திருச்சி மாநகரில் உலகத் தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் அமைக்க இடம் தோ்வு செய்யும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், நூலகம் அமைப்பதற்காக மன்னாா்புரம் பகுதியில் மேம்பாலத்தின்அருகில் உள்ள ஒரு இடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். இனிக்கோஇருதயராஜ், பொது நூலக இயக்குநா் க.இளம்பகவத், திருச்சி மாநகராட்சி மண்டலம் 3-இன் தலைவா் மு. மதிவாணன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நூலகத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.