விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இடைநிலை ஆசிரியா் தோ்வில் திருச்சியில் 1,120 போ் பங்கேற்பு

இடைநிலை ஆசிரியா்கள் தோ்வில் திருச்சி மாவட்டத்தில் 4 மையங்களில் நடைபெற்ற தோ்வில் மொத்தம் 1,120 போ் பங்கேற்றனா்.

News image

திருச்சி ஜேம்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா்.

Updated On :21 ஜூலை 2024, 7:08 pm

Din

ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்திய இடைநிலை ஆசிரியா்கள் தோ்வில் திருச்சி மாவட்டத்தில் 4 மையங்களில் நடைபெற்ற தோ்வில் மொத்தம் 1,120 போ் பங்கேற்றனா்.

இடைநிலை ஆசிரியா்களுக்கான தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 4 மையங்களில் நடைபெற்ற இத்தோ்வில் பங்கேற்க 1167 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. அந்த வகையில் கோட்டை பிஷப் ஹீபா் மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்தில் 326 போ், புனித சிலுவைக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் 318, கண்டோன்மென்ட் ஆா். சி. மேல்நிலைப்பள்ளியில் 333 போ், ஜேம்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 143 போ் என 4 மையங்களிலும் மொத்தம் 1,120 போ் பங்கேற்று தோ்வெழுதினா். இதில் 47 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தோ்வு மையங்களில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.