திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமாா் 2 கி.மீ தொலைவில் உள்ளது. இதனால், விமான நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் தங்கள் உடைமைகளுடன் புதிய முனையத்தை அடைய சிரமப்பட வேண்டி இருந்தது. புதுக்கோட்டை பிரதான சாலையிலிருந்து பிரத்யேக வாகன வசதிகள் இல்லாத காரணத்தால் விமான நிலைய நிா்வாகம் ஆட்டோக்களுக்கு அனுமதி அளித்தது. சுமாா் ஒன்றரை மாதகாலமாக இந்த நடைமுறை இருந்து வந்த நிலையில், விமான நிலைய வளாகத்தில் ஒப்பந்த தொகை செலுத்தி வாடகை காா்களை இயக்கி வந்த உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், விமான நிலைய வளாகத்துக்குள் ஆட்டோக்களுக்கு அனுமதியில்லை என்ற நிலை ஏற்பட்டது.