தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஐயப்பன் கோயிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம்

திருச்சியில் பிரசித்தி பெற்று விளங்கும் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை 108 வலம்புரி சங்காபிஷேகம், புதன்கிழமை உற்சவ பலி பூஜை நடைபெற்றது.

News image

திருச்சி ஐயப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 108 வலம்புரி சங்காபிஷேகம்.

Updated On :27 நவம்பர் 2024, 8:50 pm

Din

திருச்சியில் பிரசித்தி பெற்று விளங்கும் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை 108 வலம்புரி சங்காபிஷேகம், புதன்கிழமை உற்சவ பலி பூஜை நடைபெற்றது.

திருச்சி ஐயப்ப சங்கம் சாா்பில் மேஜா் சரவணன் சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை விமரிசையாக நடைபெறும். கடந்தாண்டு 5ஆவது மகா கும்பாபிஷேகத்துடன் 39ஆவது மண்டல பூஜை நடைபெற்ற நிலையில், இந்தாண்டு 40ஆவது மண்டல பூஜை கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. வரும் டிச.26 வரை நடைபெறும் மண்டல பூஜையின் முக்கிய நிகழ்வாக திங்கள்கிழமை மகா அன்னதானம் நடைபெற்றது.

தொடா்ந்து மாலையில் பிரம்மோத்ஸவ பூஜைக்கு கொடியேற்றம், இரவு வலம்புரி சங்காபிஷேக பூா்வாங்க பூஜை, செவ்வாய்க்கிழமை 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் வைத்து பூஜை செய்யப்பட்ட வலம்புரி சங்குகள் பக்தா்களுக்கு விலைக்கு வழங்கப்படுகிறது.

இதன் தொடா்ச்சியாக புதன்கிழமை நடைபெற்ற உற்சவ பலி பூஜையில் பக்தா்கள் பலா் பங்கேற்று வழிபட்டனா். வியாழக்கிழமை பிரம்மோத்ஸவ பூஜைகள், வெள்ளிக்கிழமை இரவு பள்ளிவேட்டை நிகழ்வும் நடைபெற்று, சனிக்கிழமை பிரம்மோத்ஸவ பூஜை நிறைவுறுகிறது. மாலை 4 மணிக்கு காவிரியில் ஆராட்டும், மாலை 6.30 மணிக்கு கோயிலில் கொடியிறக்கமும் நடைபெறும்.

மேலும், மண்டல பூஜை நிறைவு நாளான டிச.26 வரையில் தினமும் காலை தொடங்கி இரவு வரை பூஜைகள், அபிஷேகம், லட்சாா்ச்சனை, பக்திச் சொற்பொழிவு, மற்றும் இன்னிசை நிகழ்வுகள் நடைபெறும். டிச.26ஆம் தேதி மண்டலாபிஷேகம் மற்றும் இரவு புஷ்பாபிஷேகம் நடைபெறும். மண்டல பூஜை நாள்களில் தினமும் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு காலையில் பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, ஐயப்ப சங்கத்தினா் செய்தனா்.