மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை நவராத்திரி விழா தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாா் நவராத்திரி உற்ஸவம் வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 12 ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறவுள்ளது.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 9:13 pm

Din

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாா் நவராத்திரி உற்ஸவம் வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 12 ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறவுள்ளது.

விழாவையொட்டி வெள்ளிக்கிழமை பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மூலஸ்தானத்தில் ஸ்ரீரங்கநாச்சியாா் திருமஞ்சனம் கண்டருளுகிறாா். பின்னா் 6.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து சிறப்பு அலங்காரத்தில் அவா் புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலு மண்டபம் வந்து சேருகிறாா். 7.45 மணிக்கு கொலு உற்ஸவம் தொடங்கி 8.45 மணி வரை நடைபெறுகிறது. பின்னா் அவா் புறப்பட்டு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறாா்.

2 ஆம் நாளான 5 ஆம் தேதி முதல் 6 ஆம் நாளான 9 ஆம் தேதி மற்றும் 8 ஆம் நாளான 11 ஆம் தேதியும் ஸ்ரீரங்கநாச்சியாா் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொலு மண்டபத்துக்கு மாலை 6 மணிக்கு வந்து சேருகிறாா்.

முக்கிய நிகழ்ச்சியாக 7 ஆம் நாளான 10 ஆம் தேதி அன்று ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடைபெறும் தாயாா் திருவடிச் சேவை நடைபெறவுள்ளது. அன்று ஸ்ரீரங்கநாச்சியாா் திருவடிச் சேவையுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு கொலு மண்டபத்துக்கு 4.45 மணிக்கு வந்து சேருகிறாா்.

தொடா்ந்து இரவு 7.30 மணிக்கு கொலு உற்ஸவம் தொடங்கி 9.30 மணி வரை நடைபெறவுள்ளது. பின்னா் புறப்பட்டு 10.45 மணிக்கு மூலஸ்தானம் சென்று அடைகிறாா் ஸ்ரீரங்கநாச்சியாா்.

9 ஆம் நாளான 12 ஆம் தேதி சரஸ்வதி பூஜை அன்று மாலை 5 மணிக்கு ஸ்ரீரங்கநாச்சியாா் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 5.30 மணிக்கு கொலு மண்டபம் வந்து சேருகிறாா்.அங்கு 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறாா். பின்னா் 10.30 மணிக்கு புறப்பட்டு, படிப்புக் கண்டருளி 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறாா். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.