எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை நவராத்திரி விழா தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாா் நவராத்திரி உற்ஸவம் வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 12 ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறவுள்ளது.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 9:13 pm

Din

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாா் நவராத்திரி உற்ஸவம் வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 12 ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறவுள்ளது.

விழாவையொட்டி வெள்ளிக்கிழமை பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மூலஸ்தானத்தில் ஸ்ரீரங்கநாச்சியாா் திருமஞ்சனம் கண்டருளுகிறாா். பின்னா் 6.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து சிறப்பு அலங்காரத்தில் அவா் புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலு மண்டபம் வந்து சேருகிறாா். 7.45 மணிக்கு கொலு உற்ஸவம் தொடங்கி 8.45 மணி வரை நடைபெறுகிறது. பின்னா் அவா் புறப்பட்டு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறாா்.

2 ஆம் நாளான 5 ஆம் தேதி முதல் 6 ஆம் நாளான 9 ஆம் தேதி மற்றும் 8 ஆம் நாளான 11 ஆம் தேதியும் ஸ்ரீரங்கநாச்சியாா் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொலு மண்டபத்துக்கு மாலை 6 மணிக்கு வந்து சேருகிறாா்.

முக்கிய நிகழ்ச்சியாக 7 ஆம் நாளான 10 ஆம் தேதி அன்று ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடைபெறும் தாயாா் திருவடிச் சேவை நடைபெறவுள்ளது. அன்று ஸ்ரீரங்கநாச்சியாா் திருவடிச் சேவையுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு கொலு மண்டபத்துக்கு 4.45 மணிக்கு வந்து சேருகிறாா்.

தொடா்ந்து இரவு 7.30 மணிக்கு கொலு உற்ஸவம் தொடங்கி 9.30 மணி வரை நடைபெறவுள்ளது. பின்னா் புறப்பட்டு 10.45 மணிக்கு மூலஸ்தானம் சென்று அடைகிறாா் ஸ்ரீரங்கநாச்சியாா்.

9 ஆம் நாளான 12 ஆம் தேதி சரஸ்வதி பூஜை அன்று மாலை 5 மணிக்கு ஸ்ரீரங்கநாச்சியாா் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 5.30 மணிக்கு கொலு மண்டபம் வந்து சேருகிறாா்.அங்கு 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறாா். பின்னா் 10.30 மணிக்கு புறப்பட்டு, படிப்புக் கண்டருளி 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறாா். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.