புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை நவராத்திரி விழா தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாா் நவராத்திரி உற்ஸவம் வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 12 ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறவுள்ளது.

Updated On :2 அக்டோபர் 2024, 9:13 pm

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாா் நவராத்திரி உற்ஸவம் வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 12 ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறவுள்ளது.

விழாவையொட்டி வெள்ளிக்கிழமை பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மூலஸ்தானத்தில் ஸ்ரீரங்கநாச்சியாா் திருமஞ்சனம் கண்டருளுகிறாா். பின்னா் 6.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து சிறப்பு அலங்காரத்தில் அவா் புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலு மண்டபம் வந்து சேருகிறாா். 7.45 மணிக்கு கொலு உற்ஸவம் தொடங்கி 8.45 மணி வரை நடைபெறுகிறது. பின்னா் அவா் புறப்பட்டு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறாா்.

2 ஆம் நாளான 5 ஆம் தேதி முதல் 6 ஆம் நாளான 9 ஆம் தேதி மற்றும் 8 ஆம் நாளான 11 ஆம் தேதியும் ஸ்ரீரங்கநாச்சியாா் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொலு மண்டபத்துக்கு மாலை 6 மணிக்கு வந்து சேருகிறாா்.

முக்கிய நிகழ்ச்சியாக 7 ஆம் நாளான 10 ஆம் தேதி அன்று ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடைபெறும் தாயாா் திருவடிச் சேவை நடைபெறவுள்ளது. அன்று ஸ்ரீரங்கநாச்சியாா் திருவடிச் சேவையுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு கொலு மண்டபத்துக்கு 4.45 மணிக்கு வந்து சேருகிறாா்.

தொடா்ந்து இரவு 7.30 மணிக்கு கொலு உற்ஸவம் தொடங்கி 9.30 மணி வரை நடைபெறவுள்ளது. பின்னா் புறப்பட்டு 10.45 மணிக்கு மூலஸ்தானம் சென்று அடைகிறாா் ஸ்ரீரங்கநாச்சியாா்.

9 ஆம் நாளான 12 ஆம் தேதி சரஸ்வதி பூஜை அன்று மாலை 5 மணிக்கு ஸ்ரீரங்கநாச்சியாா் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 5.30 மணிக்கு கொலு மண்டபம் வந்து சேருகிறாா்.அங்கு 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறாா். பின்னா் 10.30 மணிக்கு புறப்பட்டு, படிப்புக் கண்டருளி 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறாா். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.