/

பட்டாசு கடை உரிமத்துக்கு இணையத்தில் விண்ணப்பிக்க அக்.19ஆம் தேதி கடைசி

திருச்சி மாவட்டத்தில் பட்டாசுக் கடைகளுக்கு உரிமம் பெற அக்.19ஆம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 6:51 pm

Din

திருச்சி மாவட்டத்தில் பட்டாசுக் கடைகளுக்கு உரிமம் பெற அக்.19ஆம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

தீபாவளியை முன்னிட்டு திருச்சி ஊரகப் பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் உரிமம் பெற வேண்டியது கட்டாயம். இதற்காக அரசால் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளின்படி இணையதளம் வழியாக அக். 24-க்குள் விண்ணப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது அரசின் மறு அறிவிப்பின்படி வரும் 19ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு விண்ணப்பங்கள் பெறப்படாது என்றாா்.