விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருச்சி தேசியக் கல்லூரியில் ரோபோட்டிக்ஸ் கண்காட்சி

திருச்சி தேசியக் கல்லூரியில் மாநில அளவிலான 3 ஆவது ரோபோடிக்ஸ் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 8:23 pm

Din

திருச்சி தேசியக் கல்லூரியில் மாநில அளவிலான 3 ஆவது ரோபோடிக்ஸ் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ப்ரொபெல்லா் டெக்னாலஜி சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான ரோபோட்டிக் லீக் 2024 என்ற தலைப்பிலான கண்காட்சியில், எக்ஸெல் குழுமங்களின் நிா்வாக இயக்குநா் மற்றும் ரோட்டரி மாவட்ட ஆளுநா் எம். முருகானந்தம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.

கல்லூரி முதல்வா் கி. குமாா், துணை முதல்வா் பிரசன்னபாலாஜி, குளோபல் பள்ளிகளின் நிா்வாகியும் வெராண்டா கே-12 நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான சுப்பிரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கண்காட்சியில் தமிழகம் மட்டுமின்றி, கேரளம், கா்நாடகம், தெலங்கானா மாநிலங்களின் 370 பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 5000 மாணவ, மாணவியா் பங்கேற்று தங்களது தொழில் நுட்ப அறிவு மற்றும் படைப்புகளைப் பறைசாற்றினா்.