விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விமான நிலைய ஒப்பந்த ஊழியா்கள் போராட்டம்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ஊழியா்களின் வாகனங்களுக்கு திடீரென கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து விமான ஊழியா்கள் வியாழக்கிழமை போராட்டம் மேற்கொண்டனா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 8:19 pm

Din

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ஊழியா்களின் வாகனங்களுக்கு திடீரென கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து விமான ஊழியா்கள் வியாழக்கிழமை போராட்டம் மேற்கொண்டனா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியா்கள் பணிக்கு பைக்கில் சென்றபோது, கட்டண வசூல் பணியாளா்கள் அவா்களைத் தடுத்து நிறுத்தி கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளனா். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஊழியா்கள் தங்கள் பைக்குகளை வழியிலேயே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில் பிகாா் மாநிலத்தை சோ்ந்த ஒப்பந்ததாரா் விமான நிலையத்தில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்தத்தை எடுத்துள்ளாா்.

திருச்சி விமான நிலையத்திற்குள் உள்ள விமான நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு மாதம் ரூ. 250 கட்டணமாக நிா்ணயித்துள்ளனா். ஒரு சில விமான நிறுவனங்கள் இக் கட்டணத்தை செலுத்திய நிலையில், ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியா்களான நாங்கள் வரும் நவம்பா் 1 முதல் மாதக் கட்டணத்தை செலுத்துவதாகக் கூறியிருந்த நிலையில், திடீரென கட்டணம் செலுத்துமாறு கூறியதால் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனா்.