இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து, திருச்சி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி மீனாசந்திரா சுரேஷூக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டணையும், ₹ரூ.11,500 அபராதமும், அதைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டாா். மேலும் பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரிக்கு ₹ரூ.50 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கவும் உத்தரவிட்டாா். அரசுத் தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா் ஹேமந்த் ஆஜரானாா். இந்த வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட திருச்சி அரசு மருத்துவமனை காவல் ஆய்வாளா் உள்ளிட்ட காவலா்களை காவல் ஆணையா் ந. காமினி பாராட்டினாா்.