மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பணியில் கவனக் குறைவு: பெண் தலைமைக் காவலா் உள்பட இருவா் ‘சஸ்பெண்ட்’

பணியில் கவனக் குறைவாக இருந்த பெண் தலைமைக் காவலா், மது அருந்திவிட்டு பணிக்கு வந்த ஆயுதப்படை காவலா் ஆகிய இருவரும் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 8:15 pm

Syndication

பணியில் கவனக் குறைவாக இருந்த பெண் தலைமைக் காவலா், மது அருந்திவிட்டு பணிக்கு வந்த ஆயுதப்படை காவலா் ஆகிய இருவரும் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சரிபாா்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தவா் தலைமைக் காவலா் பழனியம்மாள் (40). அண்மையில் இவா் சரிபாா்த்து அனுப்பிய விண்ணப்பதாரா் அந்தப் பகுதியில் இல்லாததால் அந்தக் கடவுச்சீட்டு, மீண்டும் கடவுச்சீட்டு அலுவலகத்துக்கே திரும்பி வந்தது.

இதுகுறித்து திருச்சி மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் சாா்பில் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதுதொடா்பான விசாரணையில் கடவுச்சீட்டு பரிசோதனையின்போது தலைமைக் காவலா் பழனியம்மாள் நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொள்ளாதது தெரியவந்தது. இதையடுத்து தலைமைக் காவலா் பழனியம்மாளை பணியிடை நீக்கம் செய்து மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி புதன்கிழமை உத்தரவிட்டாா்.

ஆயுதப்படைக்காவலா்: மாவட்ட ஆட்சியரகம் அருகே திமுக கூட்டணிக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த மாநகர ஆயுதப்படை காவலா் சதீஷ் (30) மயங்கி விழுந்தாா். மற்ற போலீஸாா் அவரை மீட்டபோது, சதீஷ் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த பரிசோதனையிலும் அது உறுதியானது. இதையடுத்து அவரைப் பணியிடை நீக்கம் செய்து மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி புதன்கிழமை உத்தரவிட்டாா்.