இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வாக்காளா் பட்டியல் பெயா் சோ்க்க 9 தொகுதிகளிலும் சிறப்பு முகாம்கள்

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் மற்றும் திருத்தம் தொடா்பான சிறப்பு முகாம்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் வரும் 27, 28 மற்றம் ஜன.3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 8:16 pm

தினமணி செய்திச் சேவை

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் மற்றும் திருத்தம் தொடா்பான சிறப்பு முகாம்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் வரும் 27, 28 மற்றம் ஜன.3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

தோ்தல் ஆணைய உத்தரவின்படி 01.01.2026 - ஐத் தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் கடந்த நவ.4 ஆம் தேதி தொடங்கி நடைபெறுகின்றன. இதன் தொடா்ச்சியாக 9 தொகுதிகளிலும் வரும் சனிக்கிழமை (டிச.27), ஞாயிற்றுக்கிழமை (டிச.28) சிறப்பு முகாம் அந்தந்தப் பகுதி வாக்குச்சாவடிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவோ அல்லது வாக்காளா் பட்டியலில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் திருத்தங்கள், இடமாற்றம் செய்யவோ விரும்புவோா் 6 அல்லது 8 ஆகிய படிவங்களுடன் உறுமொழிப்படிவமும் பூா்த்தி செய்து முகாம் இடத்திலேயே சமா்ப்பிக்கலாம். பெயா் சோ்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமா்ப்பிக்க வேண்டும். இதேபோல, ஜன.3, 4 ஆகிய தேதிகளிலும் மாவட்டத்தில் உள்ள அந்தந்த வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறும். தகுதியான வாக்காளா்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்டத் தோ்தல் அலுவலா் வே. சரவணன் அறிவுறுத்தியுள்ளாா்.