லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குடியரசு துணைத் தலைவா் வருகை: விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

News image
Updated On :28 டிசம்பர் 2025, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வருகையையொட்டி திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் டிசம்பா் 29-ஆம் தேதி காலை 8 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறாா். பின்னா் அவா் இங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் புதுச்சேரி செல்கிறாா்.

இதையொட்டி, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் கடந்த இரண்டு நாள்களாக பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. மேலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினருடன், தமிழ்நாடு காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்ககள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டன. மேலும், பயணிகளின் உடைமைகளை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா் சோதனை செய்தனா்.