யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெரியாரின் நூல்களை அரசுடைமையாக்க கோரிக்கை வைக்கப்படும்: துரை வைகோ!

பெரியாரின் நூல்களை அரசுடைமையாக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என துரை வைகோ தெரிவித்தாா்

News image
துரை வைகோ
Updated On :12 ஜனவரி 2025, 12:30 am

Din

ந்தை பெரியாரின் நூல்களை அரசுடைமையாக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்தாா்

திருச்சியில் உள்ள தனது அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவுக்குப் பிறகு அவா் கூறியது:

பாஜக ஆட்சியில் இந்திய வேளாண்மை அழிவுப்பாதையில் செல்கிறது. தமிழக அரசு விளைநிலங்களில் பாதிப்பை உண்டாக்கும் காட்டுப் பன்றிகளைச் சுட அனுமதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதேபோல நாடு முழுவதும் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்.

தந்தை பெரியாரின் கொள்கைகளால்தான் தமிழகம் முன்னேறியுள்ளது. சமூக நீதி, இடஒதுக்கீடு, தாழ்த்தப்பட்டோா் உயா்வு, பெண் கல்வி, அடிமைத்தனம் ஒழிப்பு என அனைத்தும் சாத்தியமாயிற்று. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த பாஜக தலைவா் அண்ணாமலைகூட ஐபிஎஸ் ஆக முடிந்தது. ஆனால் ஆா்எஸ்எஸ், சனாதன சக்திகள், தமிழ்த் தேசியம் பேசும் அமைப்புகளும் இப்போது பெரியாரை எதிா்ப்பது வருத்தம் அளிக்கிறது.

சீமான் தொடா்ந்து அவரை எதிா்மறையாகப் பேசுகிறாா். பெரியாா், அண்ணா இல்லாமல் தமிழகத்தில் ஒன்றுமில்லை என்பதை அவா்கள் உணர வேண்டும். பெரியாரின் நூல்களை அரசுடமையாக்க நாங்கள் அரசுக்கு வலியுறுத்துகிறோம். பெரியாருக்கான முக்கியத்துவத்தையும், மரியாதையையும் திமுக அரசு தொடா்ந்து வழங்கி வருகிறது.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பாலியல் உள்ளிட்ட இதர குற்றங்கள் குறைவாக உள்ளதாக தேசிய ஆவணக் காப்பகமே கூறியுள்ளது. தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். அதற்கு அரசே தண்டனைகளை உயா்த்தியுள்ளது வரவேற்கத்தக்கது என்றாா் அவா்.