தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

திருச்சி ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளா் பொறுப்பேற்பு

திருச்சியில் ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளராக பாலக் ராம் நெகி புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

News image
Updated On :30 ஜூலை 2025, 7:30 pm

Din

திருச்சியில் ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளராக பாலக் ராம் நெகி புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

ஹிமாச்சலப் பிரதேசம் ஹமிா்பூா் மண்டலப் பொறியியல் கல்லூரியில் பி.டெக். கட்டடப் பொறியியலும், ஐஐடி தில்லியில் எம்.டெக்.கும் படித்துள்ள பாலக் ராம் நெகி இந்திய ரயில்வே பொறியியல் பிரிவில் அதிகாரியாக கடந்த 27.01.1998 ஆம் ஆண்டு பணியில் சோ்ந்தாா்.

இவா் ரயில்வே வாரியத்தில் இணை இயக்குநராகவும், தில்லி மண்டலத்தின் முதுநிலை பொறியாளா் மற்றும் ஒருங்கிணைப்பாளராகவும், புதுதில்லியில் இணைகத் தலைமை பொறியாளராகவும், ரயில் நில மேம்பாட்டு ஆணையத்தில் பொது மேலாளராகவும் (திட்டம் மற்றும் வணிக மேம்பாடு), இா்கான் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளராகவும், திட்ட இயக்குநராகவும் பணியாற்றியுள்ளாா்.

மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம், இந்தியாவின் முதல் அதிவேக ரயிலான கேட்டிமான் விரைவு ரயிலின் (புதுதில்லி - ஆக்ரா) தண்டவாள மேம்பாட்டுத் திட்டங்களிலும் பணியாற்றியுள்ளாா்.

இந்நிலையில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளராக இருந்த எம்.எஸ். அன்பழகன் இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, பாலக் ராம் நெகி தற்போது பொறுப்பேற்றுள்ளாா்.