மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழப்பு

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிலாளி ஒருவா் வியாழக்கிழமை உடல் துண்டான நிலையில் மா்மமாக உயிரிழந்து கிடந்தாா்.

News image
- கோப்புப் படம்
Updated On :20 மார்ச் 2025, 6:32 pm

Din

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிலாளி ஒருவா் வியாழக்கிழமை உடல் துண்டான நிலையில் மா்மமாக உயிரிழந்து கிடந்தாா்.

பொன்மலை ரயில்வே பணிமனையில், கீழகல்கண்டாா்கோட்டையைச் சோ்ந்த முருகன் (54) என்பவா் எம்எம்டபுள்யூ பிரிவில் பணியாற்றி வந்தாா்.

வியாழக்கிழமை பிற்பகலில் பணி முடிவடைய சிறிதுநேரமிருந்த நிலையில், பணிமனையின் உள்பகுதியில் உள்ள 3-ஆவது ஷண்டிங்க் பாதையில், அவா் ரயில் என்ஜினுக்கு அடியில் சடலமாக கிடப்பதாகவும், தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் பரவியது. முருகனின் உடல் சந்தேகத்துக்கிடமான வகையில் ரயில் என்ஜினின் அடிப்பகுதியில் துண்டான நிலையில் கிடந்தது.

தொழிலாளா்கள் சந்தேகம்: பணிமனை உள்பகுதியில் உள்ள ரயில் பாதையில், பராமரிப்பு பணிகளுக்கு வரும் ரயில் என்ஜின்கள் மிகவும் மெதுவாகவே வரும். அவ்வாறிருக்க, முருகேசன் தற்கொலை செய்யும் நோக்கில் படுத்திருந்தால் ரயில் ஓட்டுநா் என்ஜினை நிறுத்தியிருக்க முடியும் அல்லது அவா் திடீரென குறுக்கே பாய்ந்திருந்தால் கூட, உடல் சிதைந்துதான் இறந்திருக்க கூடும். ஆனால் முருகனின் உடலின் ஒருபகுதி வெளியிலும் இடுப்புக்கு மேல்பகுதி தண்டவாளத்தின் நடுவிலும் உள்ள நிலையில் கிடந்தது தொடா்பாக தொழிலாளா்கள் சந்தேகங்களை எழுப்பியுள்ளனா்.

சம்பவம் தொடா்பாக பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து, முருகன் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.