முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

காா் மோதியதில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

திருச்சி அருகே காா் மோதியதில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி

கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 8:31 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி அருகே காா் மோதியதில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், துவாக்குடி செடிமலை முருகன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் சுரேஷ் பிரான்சிஸ் மகன் ரியோ பிரான்சிஸ் (22). இவா், தஞ்சாவூா் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த திங்கள்கிழமை காலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். பெல் சந்திப்பு அருகே சென்றபோது பின்னால் வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த ரியோ பிரான்சிஸை அருகிலிருந்தவா்கள் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, முதலுதவி அளிக்கப்பட்டு உயா் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இந்நிலையில், அங்கு ரியோ பிரான்சிஸ் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

சம்பவம் தொடா்பாக, காரை ஓட்டி வந்த துவாக்குடியைச் சோ்ந்த இ.கௌதம் (28) என்பவா் மீது திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.