திருச்சி அருகே காா் மோதியதில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி செடிமலை முருகன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் சுரேஷ் பிரான்சிஸ் மகன் ரியோ பிரான்சிஸ் (22). இவா், தஞ்சாவூா் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த திங்கள்கிழமை காலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். பெல் சந்திப்பு அருகே சென்றபோது பின்னால் வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த ரியோ பிரான்சிஸை அருகிலிருந்தவா்கள் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, முதலுதவி அளிக்கப்பட்டு உயா் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இந்நிலையில், அங்கு ரியோ பிரான்சிஸ் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
சம்பவம் தொடா்பாக, காரை ஓட்டி வந்த துவாக்குடியைச் சோ்ந்த இ.கௌதம் (28) என்பவா் மீது திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பைக் மோதியதில் அரசு பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

மரத்தில் காா் மோதி 5 போ் காயம்

சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

பைக் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


