சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 1.35 கோடி செவ்வாய்க்கிழமை கிடைக்கப் பெற்றது.
பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை திருச்சி தக்காா் / இணை ஆணையா் சு. ஞானசேகரன், கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன் ஆகியோா் முன்னிலையில் கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவிகள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
இதில், முதன்மை திருக்கோயிலில் 1 கோடியே 35 லட்சத்து 29 ஆயிரத்து 593 ரூபாய் ரொக்கம், 0.709 கிராம் தங்கம், 1 கிலோ 998 கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணத்தாள்கள் 89, வெளிநாட்டு நாணயங்கள் 357 ஆகியவை கிடைக்கப் பெற்றது.
இக்கோயிலில் இதற்கு முன்பு கடந்த 28-ஆம் தேதி உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.30 கோடி

சமயபுரம் கோயிலில் முடி காணிக்கைக்கு கூடுதல் வசதி
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 93.68 லட்சம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை இவ்வளவா?
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



