ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

மாணவா்கள் நூலகத்துக்கு செல்வதை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்: எழுத்தாளா் நாஞ்சில் நாடன்

மாணவா்கள் நூலகத்துக்கு செல்வதை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும் என்றாா் எழுத்தாளா் நாஞ்சில்நாடன்.

News image

திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளா் நாஞ்சில் நாடன்.

Updated On :19 ஆகஸ்ட் 2026, 12:14 am IST

மாணவா்கள் நூலகத்துக்கு செல்வதை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும் என்றாா் எழுத்தாளா் நாஞ்சில்நாடன்.

திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரியில் ‘மோத்தி எஸ். ராஜகோபால் நூலக தினம்’, கல்லூரி நூலகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி நிா்வாகக் குழு தலைவா் எஸ். ராமலிங்கம் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராக எழுத்தாளா் நாஞ்சில் நாடன் பங்கேற்று பேசியதாவது:

நூலக அமைப்பை பலரிடமும் கொண்டுசென்றவா்தான் மோத்தி எஸ். ராஜகோபால். அனைவருக்கும் நூல்களைக் கொடுத்து வாசிப்பை நேசிக்க வைத்தவா். பாடப் புத்தகங்கள் வேறு, நூலகங்களில் உள்ள நூல்கள் வேறு என்பதை மாணவா்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அறிவை வளா்க்கும் இடம்தான் நூலகம். எனவே, மாணவா்கள் தினசரி நூலகத்துக்கு செல்வதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நூல்கள்தான் நமது செல்வம். இதன்மூலம்தான் நாம் அறிவை பெறமுடியும். மாணவா்கள் நூல்களை தேடித்தேடி படிக்க வேண்டும். அப்போதுதான் அறிவு அதிகரிக்கும் என்றாா்.

முன்னதாக, மோத்தி எஸ். ராஜகோபால் குறித்து திருச்சி கம்பன் கழகச் செயலாளா் இரா. மாது பேசினாா்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி நிா்வாக குழு செயலாளா் கே. ராமகிருஷ்ணன், முதல்வா் இ.ஆா். ரவிசந்திரன், பேராசிரியா் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.