மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மின்வாரிய தொழிற்சங்க ஆா்ப்பாட்டம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் திருச்சியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
திருச்சி தென்னூா் மின்வாரிய அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய சங்கத்தினா்.
Updated On :27 பிப்ரவரி 2026, 8:50 pm

Syndication

ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் திருச்சியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்னூரில் உள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு

சிஐடியு மாநிலத் துணைத் தலைவா் எஸ்.ரங்கராஜன் தலைமைவகித்தாா்.

பொறியாளா் கழக மாநில செயலா் விக்கிரமன், எம்ப்ளாயீஸ் ஃபெடரேசன் சிவசெல்வம், இன்ஜினியா் சங்கத்தின் சங்கா், சிஐடியு நடராஜன மற்றும் ஐக்கிய சங்கம், டிஎன்பிஇஓ சங்கம், அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்க நிா்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

பொறியாளா்கள், அலுவலா்களுக்கு 2023-ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய ஊதிய உயா்வை வழங்க வேண்டும். மின்வாரியத்தில் பணிபுரியும் தொழிலாளா்கள், பொறியாளா், அலுவலா்களை பிரித்தாளும் முயற்சிகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில், மின்வாரிய தொழிற்சங்கத்தினா் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.