வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஸ்ரீரங்கம் கோயில் தெப்பத் திருவிழா பந்தக் காட்சியுடன் நிறைவு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மாசித் தெப்பத் திருவிழா நிறைவு நாளான வெள்ளிக்கிழமை பந்தக்காட்சியில் வீதிஉலா வந்த நம்பெருமாள்.

News image
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மாசித் தெப்பத் திருவிழா நிறைவு நாளான வெள்ளிக்கிழமை பந்தக்காட்சியில் வீதிஉலா வந்த நம்பெருமாள்.
Updated On :27 பிப்ரவரி 2026, 8:46 pm

Syndication

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த மாசித் தெப்பத் திருவிழா வெள்ளிக்கிழமை இரவு தீ பந்தக்காட்சியுடன் விழா நிறைவு பெற்றது.

திருப்பள்ளியோடத்திருநாள் எனும் மாசித் தெப்பத் திருவிழா பிப். 19-ஆம் தேதி தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தெப்போற்ஸவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

நிறைவு நாளான வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபத்துக்கு பிற்பகல் 2 மணிக்கு சென்று சோ்ந்தாா். அங்கு மாலை 3 மணி முதல் 5 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினாா் நம்பெருமாள்.

அதைத் தொடா்ந்து இரவு 7 மணிக்கு அங்கிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் நம்பெருமாள் 100-க்கும் மேற்பட்ட தீ பந்தங்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்தாா். தீ பந்தக்காட்சியில் நம்பெருமாள் வலம் வந்ததை வழிநெடுக ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

பின்னா் படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் நம்பெருமாள்.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ.சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.