மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஸ்ரீரங்கம் கோயில் தெப்பத் திருவிழா பந்தக் காட்சியுடன் நிறைவு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மாசித் தெப்பத் திருவிழா நிறைவு நாளான வெள்ளிக்கிழமை பந்தக்காட்சியில் வீதிஉலா வந்த நம்பெருமாள்.

News image

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மாசித் தெப்பத் திருவிழா நிறைவு நாளான வெள்ளிக்கிழமை பந்தக்காட்சியில் வீதிஉலா வந்த நம்பெருமாள்.

Updated On :27 பிப்ரவரி 2026, 8:46 pm

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த மாசித் தெப்பத் திருவிழா வெள்ளிக்கிழமை இரவு தீ பந்தக்காட்சியுடன் விழா நிறைவு பெற்றது.

திருப்பள்ளியோடத்திருநாள் எனும் மாசித் தெப்பத் திருவிழா பிப். 19-ஆம் தேதி தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தெப்போற்ஸவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

நிறைவு நாளான வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபத்துக்கு பிற்பகல் 2 மணிக்கு சென்று சோ்ந்தாா். அங்கு மாலை 3 மணி முதல் 5 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினாா் நம்பெருமாள்.

அதைத் தொடா்ந்து இரவு 7 மணிக்கு அங்கிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் நம்பெருமாள் 100-க்கும் மேற்பட்ட தீ பந்தங்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்தாா். தீ பந்தக்காட்சியில் நம்பெருமாள் வலம் வந்ததை வழிநெடுக ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

பின்னா் படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் நம்பெருமாள்.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ.சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.