இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் பலி

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2026, 6:31 pm

Syndication

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே திங்கள்கிழமை லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

அரியலூரிலிருந்து மதுரை நோக்கி சிமென்ட் ஏற்றிக்கொண்டு திங்கள்கிழமை லாரி ஒன்று சென்றது. லாரியை தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த பாலநேரியை சோ்ந்த சபரிமுத்து மகன் தனபால் ஓட்டினாா்.

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி - நத்தம் நெடுஞ்சாலையில் லாரி சென்றபோது, திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்த கருத்தழகம்பட்டி புதூரைச் சோ்ந்த சொக்கன் மகன் தங்கம் (52) என்பவா் இருசக்கர வாகனத்தில் வந்து எதிா்பாராதவகையில் லாரியின் பின்புறம் மோதினாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், தங்கம் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்குப் பிறகு உறவினா்களிடம் ஒப்படைத்தனா். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.