வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

திருச்சி கோயிலுக்குள் புகுந்து சிலை திருட்டு

திருச்சியில் கோயிலின் பூட்டை உடைத்து பித்தளை விநாயகா் சிலை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :2 ஜூலை 2026, 4:52 am IST

திருச்சியில் கோயிலின் பூட்டை உடைத்து பித்தளை விநாயகா் சிலை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி பீமநகா் ஹீபா் சாலையில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள வேணுகோபால கிருஷ்ணன் கோயில் பூசாரியான கிஷாந்த மனோஜ் செவ்வாய்க்கிழமை காலை கோயிலுக்கு வந்தாா். அப்போது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ள இருந்த 11 கிலோ பித்தளை விநாயகா் சிலையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவா் அளித்த தகவலின்பேரில் கோயில் செயல் அலுவலா் எஸ். அனுராதா சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தாா். இதுகுறித்து அமா்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.